நமது ஸ்தாபனம் தமிழகத்தில் துவக்கப்பட்டு 75 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதைக் கொண்டாடும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் நமது ஸ்தாபனத்தின் (Assemblies of God) வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது அவசியம். இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள சுவையான தகவல்கள், வரலாற்றுப் பதிவுகள், வரலாற்றுப் படிப்பினைகள் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாயிருக்கும். மூத்த தேவ ஊழியர்களுக்கு தாங்கள் கடந்து வந்த பாதையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூறவும், புத்துணர்ச்சி அடையவும் இது போன்ற தகவல்கள் உதவிடும். வளர்ந்து வரும் இளம் ஊழியர்களுக்கு சிறந்த படிப்பினைகளையும், மன ஊக்கத்தையும் ஏற்படுத்த இதுபோன்ற கட்டுரை பெரிதும் உதவிடும்.
அதே சமயம் இக்கட்டுரை முழுமை பெற்ற வரலாற்று ஆவணமாக கருத இயலாது. இன்னும் ஏராளமான நேரடி பேட்டிகளுடனும் (Primary Data), மற்றும் வரலாற்று நூல்களின் ஆதாரத் திரட்டுடனும் (Secondary Data) விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள குறைந்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து, அசெம்பிளி ஆப் காட் சரித்திரத்தை, குறிப்பாக நமது தமிழ் பிரதேசத்தின் சரித்திரத்தை சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.
மேலும் படிக்க >>1972-ம் ஆண்டு டேவிட் ஸ்டூவர்ட் அவர்களுக்கு இந்திய தேசத்தின்கல்லூரி மாணவர்களைக் குறித்த பாரத்தை ஆண்டவர் கொடுத்தார். எனவே, அந்த ஆண்டு சகோ. விக்டர் என்பவரை மாணவர் ஊழியராக நியமித்தார்கள். அப்போது இந்த ஊழியம் “COLLEGEIATE AMBASSADORS" என்று அழைக்கப்பட்டது.
மேலும் படிக்க >>1967ம் ஆண்டு வாலிப சமுதாயத்தின் மீது பாரம் கொண்ட Rev. Stewart senior அவர்களும், Rev. Dr. C சகரியா அவர்களும் இணைந்து செயல்பட்டதின் மூலமாக, Mrs. Guinn மற்றும் Fern Ogleஆகியோரின் பொருளாதார உதவியின் மூலமாக 1968 ஏப்ரல் 16ம் தேதி முதல் வாலிபர் முகாம் 2 நாட்கள் A.G.
மேலும் படிக்க >>மிஷனெரிகள் மேரி சாப்மேன், C. S. ஈ.டி, டாரீஸ் எட்வர்ட்ஸ் போன்றோர்கள் தமிழ் பிரதேசத்தில் வந்து சபைகளை ஸ்தாபித்தனர். மேலும் 1993-ல் பெண்களுக்கான திரித்துவ வேதாகம கல்லூரியை நிறுவினதில் கொலின் குயின் அம்மையாரின் பங்கு அதிகம்.
மேலும் படிக்க >>சங்கை Dr. Y. ஜெயராஜ் அவர்கள் நமது ஹ.ழு ஸ்தாபனத்தின் தலைவராக பொறுப்பில் இருந்த போது, சுமார் 1971-ல், ஸ்தாபனத்தின் பொருளாதாரக் குறைவுகளை சீர்படுத்தவும், பிரச்சனைகள் ஏற்படும் போது ஒன்று கூடி ஜெபிக்கவும், கிராமங்கள் தோறும் சுவிசேஷம் அறிவித்து சபைகளை ஸ்தாபிக்கவும், சபைகள் வளர்ச்சி அடையவும், ஆண்கள் ஐக்கிய அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் படிக்க >>புல்விளை ஏ.ஜி சபையில் சுமார் 30-40 விசுவாசிகளுக்கு போதகராயிருந்த பாஸ்டர் னD. சாமுவேல் மிஷனரி அழைப்பு பெற்று 1974 முதல் 1979 வரை 5 ஆண்டுகள் பீகாரில் சென்று குறிப்பாக சாசாராம் என்னுமிடத்தில் ஊழியம் செய்தார்.
மேலும் படிக்க >>கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பாக தேவனுடைய வழிநடத்துதலின்படி தேவசங்க சபைகளின் அகில உலக தலைவர் Rev. Dr. D. மோகன், AGWM Rev. மாற்கு டேனியேல் தற்போதைய SIAG தலைவர் Rev. A. ஆபிரகாம் தாமஸ் மற்றும் CMS தலைவர்
மேலும் படிக்க >>1960-ம் அண்டு முதல் நமது தமிழ் பிரதேசத்தில் பரிபூரண ஜீவன் பத்திரிக்கை ஊழியம் நடைபெற்று வருகிறது. "The Abundant Life”என்ற ஆங்கில பத்திரிக்கையை Rev. Dr. Y. ஜெயராஜ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து முதலில் வெளியிட்டு வந்தார்கள்.
மேலும் படிக்க >>1948-ல் கணக்குப்பிள்ளை வலசையில் ஊழியத்தை ஆரம்பித்த எட்வர்ட்ஸ் அம்மையார் தான் தங்கியிருந்த வீட்டிலும், வலசையை சுற்றியிருக்கும் கிராமங்களிலும் சிறுவர் ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். மேலும் ‘Radiant Life' என்ற ஒரு இதழை ஆரம்பித்து அதில் ஞாயிறுபள்ளி பாடத்திட்டத்தையும், துணுக்குகளையும் வெளியிட்டார். இதுவே AGCM Tamil Nadu-க்கு அடித்தளம் எனலாம்.
மேலும் படிக்க >>